சனி, 14 ஜூலை, 2018

என்ன பெயர் இதற்கு ?

அன்பெனும் சாபமது அவர் கண்ணில் தெரிந்ததெனக்கு.
கலங்கிய கண்ணீரில் கரைந்தது என்னுள்ளம்.
முதுமையின் முழுமையில் இமைமுடி விழுகையில்
ஒருவேலை உணவிற்க்கு உழைக்கநினைக்கும் உயிரது. 
கால் சிறிது  நீட்டாது ஒரு ஓரத்தில் அமர்ந்து
நரைமுடியில் மறைந்த முகமதில் தெரிய
பசியின் தவிப்பு அவர் இசையதில் புரிய
மீட்டும்  இசையில் தன் பசி  அதனை மறக்க 
ஆசை கொண்ட அவரது முகத்தில் - ஏக்கம்
அவை ஏற்றங்கள் அறியாமல் ஏற துடித்தது .
எட்டு திசையிலும் எட்டாத கண்ணீரை
துடைத்ததும் அந்த இசையின் வலிமைதான்.
இது பசியின் துயரமா? ஏழ்மையின் உயரமா?




                                                                                                                - கிரிசேஷ் குமார்








சனி, 7 ஜூலை, 2018

எது வறுமை ???

காசு பணம் எல்லாம் கொட்டிக்கிடக்கும் 
கணத்த நெஞ்சம் கவலையில் மிதக்கும் 
அனைத்து செல்வமாய் கண்முன்னே தெரியும்
அணைக்க முடியாமல் அன்றாடம் அலையும் 

இது தான் வறுமையா ?

காலை மதியம் இரவு என மூன்று வேலைக்கும் 
ஒருமுறையே உணவாக பழையசோற்றை உண்ணும் 
கழிவறை அளவிலிருக்கும் இடத்தை இருப்பிடமாக கொண்டு 
கண்திறந்து கனவுகாணும் மக்களின் உள்ளம் 

இல்லை இது தான் வறுமையா ?

கேட்டவை எல்லாம் கையில் கிடைக்கும் 
கேட்காதவை கூட கண்முன் அமையும் 
வெற்றிடம் ஒன்று மனதினுள் நிலவும் 
வெறுமையை துடைக்க நாள்தோறும் திரியும் 

இதற்கு பெயர் என்ன ?

மறுநாள் நிச்சயமிலா ஒருநாள் வாழ்வில் 
மனதை ஏமாற்ற கனவுகள் சில காணும் 
தனக்கென்று ஒரு அடையாளத்தை தேடி 
தனக்குள்ளே நொடிவிடாது போராடும் 

இதன் பெயர் தான் வறுமையோ ?

வறுமையின் பொருளை நாடி தினமும் 
வறுமையால் வாடும் வாழ்க்கையை மறக்க 
வரைமுறைக்குள் முடங்கிக்கிடக்கும் 
மனதின் பெயர் என்ன ???

பதில்கள் பல இருந்தாலும் 
கேள்வி அது ஒன்றே ஆகும் 

எது வறுமை ???




                                                                - கிரிசேஷ் குமார்