புதன், 9 ஜனவரி, 2019

நீரின்றி அமையாது உலகு!

விண்ணிலிருந்து மண்ணடைய காத்திருக்கும்
சிறு துளிகள் பலவற்றின் சுமைதாங்கும் மேகங்காள்
ஒன்றுக்கொன்று இணையத்தொடங்கும் அத்தருணத்தில்
துல்லிய மழை துளியொன்று தூய அம்முகிலில் இருந்து
தரை பட்டு தஞ்சம் புகுந்திட புறப்பட்டு மேலிருந்து 
கடல் நீரின் உப்பில் கரைய - கீழ் நோக்கி 
காற்றில் கலந்து கரை சேர காத்திருக்கும் நேரத்தில் 
வாடிடும் பயிரை கண்டு நிற்கும் விவசாயியின் 
கண்களும் கலங்கும்  அக்காட்சியைப் பார்த்து.




                                                                       - கிரிசேஷ் குமார்