சனி, 31 ஆகஸ்ட், 2019

ஒரு படி மேல்

ஒருமையில் இருந்தவன் நான் - என்னையும் 
உன்னை நோக்கி நகரச் செய்து 
நித்தம் நின் நிழலில் நான் வாழ நினைக்க 
தசையனைத்தும் உருகிட உன் பார்வையில் 
என் தவறுகள் பலவற்றை சரி செய்து நீ 
தவறாதவாறு நான் உன்னை பார்த்துக்கொள்ள 
ஏக்கம் அனைத்தையும் வடிந்த என் கண்ணீரில் 
துடைத்தெறிந்த உன் மடியில் நான் சாய 
எனை நானே எதிர்பார்க்காதவாறு மாற்றிய 
உன்னை நீ எதிர்பார்த்ததை விட 
நான் இன்று ஒரு படி மேல் சென்று 
முற்று பெறாத எனது ஒரே கவிதையாய் 
பார்க்கத் தொடங்கிவிட்டேன்...