தாய் வயிற்றிலிருந்து வந்த சிசுவதன்
அழுகுரலில் கேட்கும் முதலோசை.
கருங்கற்கள் அவை சிந்திச்சிதற
சிற்பங்களை செதுக்கும் சிலையோசை.
தன் குஞ்சின் பசியினை தணிக்க - அலைந்துதிரியும்
காகமது கரையும் அதன் ஏக்கம் ஓசை.
உலகுயிரை காக்க மேகமவை பொழியும்
சிறுதுளி மழையிலும் கேட்கும் உயிரின் ஓசை.
காதலனை எண்ணி கண்ணியவள் சிந்தும்
கண்ணீரில் கேட்கும் ஆவலோசை.
கரைசேர துடிக்கும் மீனவனின் துடுப்பில்
விலகும்நீரில் கேட்பது உறுதியோசை.
கள்ளம்கபடமில்லாது கண்முன்னே இருக்கும்
குழந்தை சிரிப்பில் கேட்பது மழலையோசை.
இவ்வாறு ஓசைகள் பலகோணத்தில் இருந்தாலும்
இசையின் உயிர்துடிப்பாய் இருப்பது வாழ்வினோசை!
- கிரிசேஷ் குமார்
அழுகுரலில் கேட்கும் முதலோசை.
கருங்கற்கள் அவை சிந்திச்சிதற
சிற்பங்களை செதுக்கும் சிலையோசை.
தன் குஞ்சின் பசியினை தணிக்க - அலைந்துதிரியும்
காகமது கரையும் அதன் ஏக்கம் ஓசை.
உலகுயிரை காக்க மேகமவை பொழியும்
சிறுதுளி மழையிலும் கேட்கும் உயிரின் ஓசை.
காதலனை எண்ணி கண்ணியவள் சிந்தும்
கண்ணீரில் கேட்கும் ஆவலோசை.
கரைசேர துடிக்கும் மீனவனின் துடுப்பில்
விலகும்நீரில் கேட்பது உறுதியோசை.
கள்ளம்கபடமில்லாது கண்முன்னே இருக்கும்
குழந்தை சிரிப்பில் கேட்பது மழலையோசை.
இவ்வாறு ஓசைகள் பலகோணத்தில் இருந்தாலும்
இசையின் உயிர்துடிப்பாய் இருப்பது வாழ்வினோசை!
- கிரிசேஷ் குமார்