சனி, 16 ஜூன், 2018

இன்பம்

கனவில் வரும் வண்ணமெல்லாம்
மனத்துள்ளே வெளிப்படுகின்றன
அதில் மலரும் கதைகளமதுவோ
கண்ணில் வந்து மறைகின்றன
ஏக்கம் கொண்ட எண்ணங்களெல்லாம்
எழிலழகுடன் தெரிகின்றன
அனைத்தையும் நானோ மறந்துகிடக்க
மழை சாரல் மனதில் பொழிகின்றன
மயக்கம் தரும் காலைப்பொழுதோ
கற்பனைக் கனவில் மிதக்கின்றன
கண்ணுலகில் நிறைவேறா ஆசைகள்
கனவுலகில் நித்தம் நடக்கின்றன.






                                                      - கிரிசேஷ் குமார்       

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக