வியாழன், 31 மே, 2018

துன்பத்தை மறைக்கும் தூக்கம்

கண்ணால் கண்ட நிகழ்வுகளை எண்ணி, 
கலங்கிநிற்கும் முகில்திரள் மனமதனை எண்ணி, 
நம் முகத்தில் மலரும் சிறு சிரிப்பை கூட 
விடைக்க மறுக்கும் எண்ணங்களை எண்ணி, 
துவண்டு திரியும் சிதறிய ஏக்கங்களை 
தாங்கிக்கொள்வது என்பது - நம் 
கண்ணில் தேங்கும் கண்ணீரை  துடைத்திடாமல் 
கரையும்வரை பார்த்துக்கொண்டிருப்பது போன்றதாகும்.
ஆனால், எத்தகைய துன்பம் வந்தாலும் 
எந்தளவுக்கு மனமது உடைந்திருந்தாலும் 
சிறிது நேரம் தூங்கிட - கலைந்திடும் 
நீர் சேரா மேகங்களைப் போன்றதாகும். 
நமக்காக நம்முள் இருக்கும் ஒருவன் 
நம் துன்பங்களை களைய இருக்கிறான். 
தூக்கம் தெளிந்து நாம் எழுந்திடும் போது 
நம் துன்பமானது நமக்கு மறந்திருக்கும் அல்லது
நமக்கே தெரியாமல் நமக்குள் மறைந்திருக்கும்.
துன்பத்தில் வந்த கோபமும் - அதனால் 
துடித்து துடித்து ஏங்கிய ஏக்கமும் 
நாம் தூங்கி எழுந்த பிறகு நம்மை விட்டு 
அகன்று செல்லும் அந்த கனவுடனே. 
வலி முற்றிலும் மறையவில்லையெனினும் 
அவ்வலியை மறக்க ஒரு வழி நமக்கு தெரிந்துவிடும். 
இவ்வளவு நன்மை பயக்கும் அத்தூக்கமோ 
அதிகம் வருவது நம் துன்பத்தில் மட்டும் தான்.




                                                                                               - கிரிசேஷ் குமார்    

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக