கருமயிர் நரைக்க கவலைகள்பல இருக்க,
கண்சிமிட்டாது அவனது கருவிழியோ,
கண்ணிமைக்கும் கருஞ்சிலையவளை நோக்கி.
கடமை துயரை நித்தமவன் மறைத்து,
சிறு நளினமும் நகர்ந்திடாது அமைத்து,
சிலை வடிவை சிறப்புற அமைத்தான்.
சிற்றோன் அவன் தன் வலி கொடுத்து,
சிலையதனில் உயிர்வலி கண்டான்.
வெண்பனி முகங்களுவ முனைந்தவன் விரைந்து,
வினையாற்றும் எண்ணத்தை சிலைவிழியில் பார்க்க,
வியர்வைத்துளி அதுவும் வெண்குருதியாக தெரிய,
விசைக்காற்றில் மயங்கியவனோ விழிமுழுதும் காதல்கொண்டான்.
- கிரிசேஷ் குமார்
கண்சிமிட்டாது அவனது கருவிழியோ,
கண்ணிமைக்கும் கருஞ்சிலையவளை நோக்கி.
கடமை துயரை நித்தமவன் மறைத்து,
சிறு நளினமும் நகர்ந்திடாது அமைத்து,
சிலை வடிவை சிறப்புற அமைத்தான்.
சிற்றோன் அவன் தன் வலி கொடுத்து,
சிலையதனில் உயிர்வலி கண்டான்.
வெண்பனி முகங்களுவ முனைந்தவன் விரைந்து,
வினையாற்றும் எண்ணத்தை சிலைவிழியில் பார்க்க,
வியர்வைத்துளி அதுவும் வெண்குருதியாக தெரிய,
விசைக்காற்றில் மயங்கியவனோ விழிமுழுதும் காதல்கொண்டான்.
- கிரிசேஷ் குமார்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக