ஞாயிறு, 29 ஏப்ரல், 2018

ஊக்கம்

பனித்துளியை சுமக்கும் இலையில் 
இளவெயிலது பட்டுத் தெறிக்கும். 
இன்னிசையாக கூவும் குயிலின் குரலோ 
மற்றவர்களின் மனதை வருடும். 
மண் நனைந்து வீசும் அந்த வாசம் 
மழைவரும்முன் ஆடும் மயிலுக்கு தெரியும். 
சிறு வார்த்தைகள் பல பின்னிய கதைகள் 
சித்திரம் அமைத்து நகர்வதை கண்டேன், 
கண் முன் தோன்றி மறைவதெல்லாம் 
கனவென நினைத்து அலைந்துதிரிந்தேன். 
அலைந்து அலைந்து ஓய்ந்த கால்கள் 
அமைதி பெற்று நின்றது ஓரிடத்தில். 
நிலைபெற்ற அன்பதனைக் கண்டு 
நீடித்து நிற்க துடித்த உயிர் எனது.




                                                           - கிரிசேஷ் குமார்    

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக