கலையும் மேகங்கள் ஒன்றாக கூடிட,
மறையும் கதிரவனும் மதியழகை கூட்டிட,
கதை பல பேசிய காலங்களெல்லாம்
ஒரு சிறுகதையாக கண்முன் ஓடிட,
நம்பிக்கை எனும் சிறுஉறுதியினை
தன்னம்பிக்கையாக மாறிட வித்திட்ட
உயிர்கள் சில இவ்வுலகில் இருப்பின்
அவர்கள் நமது கல்லூரி தந்த- தூய
நட்பாகவே இருந்திட இயலும்.
எல்லா உணர்வுகளும் ஒன்றுசேர,
தாம் கல்லூரியில் கழித்த முதல்நாளினை,
கனவாக கண்டு திளைத்து, திகைத்தும்
தூக்கமில்லாது கண்ட கனவது கலைய,
தம் முகத்தை நனைக்கும் கண்ணீரை,
துடைக்க மனமில்லாமல் மனமுடைந்து,
சிரிப்பை விளைவித்த கல்லூரியின் கடைசிநாள்!
- கிரிசேஷ் குமார்
மறையும் கதிரவனும் மதியழகை கூட்டிட,
கதை பல பேசிய காலங்களெல்லாம்
ஒரு சிறுகதையாக கண்முன் ஓடிட,
நம்பிக்கை எனும் சிறுஉறுதியினை
தன்னம்பிக்கையாக மாறிட வித்திட்ட
உயிர்கள் சில இவ்வுலகில் இருப்பின்
அவர்கள் நமது கல்லூரி தந்த- தூய
நட்பாகவே இருந்திட இயலும்.
எல்லா உணர்வுகளும் ஒன்றுசேர,
தாம் கல்லூரியில் கழித்த முதல்நாளினை,
கனவாக கண்டு திளைத்து, திகைத்தும்
தூக்கமில்லாது கண்ட கனவது கலைய,
தம் முகத்தை நனைக்கும் கண்ணீரை,
துடைக்க மனமில்லாமல் மனமுடைந்து,
சிரிப்பை விளைவித்த கல்லூரியின் கடைசிநாள்!
- கிரிசேஷ் குமார்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக