வெள்ளி, 13 ஏப்ரல், 2018

பிரியா(புரியா)விடை

கலையும் மேகங்கள் ஒன்றாக கூடிட, 
மறையும் கதிரவனும் மதியழகை கூட்டிட, 
கதை பல பேசிய காலங்களெல்லாம் 
ஒரு சிறுகதையாக கண்முன் ஓடிட, 
நம்பிக்கை எனும் சிறுஉறுதியினை 
தன்னம்பிக்கையாக மாறிட வித்திட்ட 
உயிர்கள் சில இவ்வுலகில் இருப்பின் 
அவர்கள் நமது கல்லூரி தந்த- தூய 
நட்பாகவே இருந்திட இயலும். 
எல்லா உணர்வுகளும் ஒன்றுசேர, 
தாம் கல்லூரியில் கழித்த முதல்நாளினை, 
கனவாக கண்டு திளைத்து, திகைத்தும் 
தூக்கமில்லாது கண்ட கனவது  கலைய,
தம் முகத்தை நனைக்கும் கண்ணீரை, 
துடைக்க மனமில்லாமல் மனமுடைந்து, 
சிரிப்பை விளைவித்த கல்லூரியின் கடைசிநாள்!


                                                                                                 - கிரிசேஷ் குமார்


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக