இருண்டு கிடக்கும் உலகம் அனைத்தும்
கன்னிமைகள் அவை திறக்கும் முன்னே.
பார்வை தெரியும் முன் கேட்டிடும் செவியில்
என்னைப்பார்த்த அவளின் அன்புக் கதறல்.
விழிதிறந்து நான் அவளை பார்க்க - விடாமல்
அழுதது அவள் வலியை உணர்ந்திடத்தானோ?
தன் கைக்குள் அணைத்த அவள் என்னை - முத்தமிட்டாள்
அவள் குருதி கொண்ட எனது மேனியில்.
என் கையது அவள் முகத்தில் பட்டதும்
மறக்க முடியாத அவளது வலியோ
மறதிகொண்டு புன்னகையானது - அவள்
சதையில் உயிர்கண்ட என்னைக் கண்டு.
இத்தகைய தாய்மையின் நிகர் வேறேதும் உண்டோ இவ்வுலகில்???
- கிரிசேஷ் குமார்
கன்னிமைகள் அவை திறக்கும் முன்னே.
பார்வை தெரியும் முன் கேட்டிடும் செவியில்
என்னைப்பார்த்த அவளின் அன்புக் கதறல்.
விழிதிறந்து நான் அவளை பார்க்க - விடாமல்
அழுதது அவள் வலியை உணர்ந்திடத்தானோ?
தன் கைக்குள் அணைத்த அவள் என்னை - முத்தமிட்டாள்
அவள் குருதி கொண்ட எனது மேனியில்.
என் கையது அவள் முகத்தில் பட்டதும்
மறக்க முடியாத அவளது வலியோ
மறதிகொண்டு புன்னகையானது - அவள்
சதையில் உயிர்கண்ட என்னைக் கண்டு.
இத்தகைய தாய்மையின் நிகர் வேறேதும் உண்டோ இவ்வுலகில்???
- கிரிசேஷ் குமார்