செவ்வாய், 30 அக்டோபர், 2018

தாயன்பு!

இருண்டு கிடக்கும் உலகம் அனைத்தும் 
கன்னிமைகள் அவை திறக்கும் முன்னே. 
பார்வை தெரியும் முன் கேட்டிடும் செவியில் 
என்னைப்பார்த்த அவளின் அன்புக் கதறல். 
விழிதிறந்து நான் அவளை பார்க்க - விடாமல் 
அழுதது அவள் வலியை உணர்ந்திடத்தானோ?
தன் கைக்குள் அணைத்த அவள் என்னை - முத்தமிட்டாள் 
அவள் குருதி கொண்ட எனது மேனியில்.
என் கையது அவள் முகத்தில் பட்டதும் 
மறக்க முடியாத அவளது வலியோ 
மறதிகொண்டு புன்னகையானது - அவள் 
சதையில் உயிர்கண்ட என்னைக் கண்டு. 


இத்தகைய தாய்மையின் நிகர் வேறேதும் உண்டோ இவ்வுலகில்???






                                                                   - கிரிசேஷ் குமார் 




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக