வியாழன், 16 ஆகஸ்ட், 2018

மனதின் ஆசை

கூட்டத்தை தொலைத்த பட்டாம்பூச்சி 
கூடி வாழ வழிதனை தேடியது. 
பூக்கள் குவிந்த தோட்டத்தினுள் சென்று 
பல வண்ணங்களை கண்டு வியந்து நின்றது.  
ஒரு சிவப்பு நிற செம்பருத்தி அங்கு 
தன்னை அழைக்க விரைந்து சென்றது. 

"உன் அழகை உணர்ந்த எந்தன் மனமோ 
  நின் சிறகினைவிட வேகமாக அடிக்கிறது.
  உன்னில் என்னை ஓர் அங்கமாக கொண்டு 

  இருப்பதை அறியாமல் இருக்கும் உனக்கு 
  என் உயிரை தேனாக பரிசளிக்கிறேன் "

என்று அதன் மனதை உரைத்தது அப்பூ.

அத்தருணத்தில் தனக்கு கிடைத்த அன்பினால்
தனிமையில் திரிந்த அந்த பட்டுபூச்சிக்கோ 
தனக்கென ஒரு உயிர் உள்ளதை எண்ணி 
உள்ளம் உருக மகிழ்ச்சியில் மிதந்தது.





                                                                                                 - கிரிசேஷ் குமார் 

 


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக