பிறை திரும்பி பார்க்கையில் அடையும் கிறக்கம்
பிணை கைதியாக்கி நாற்கோண அறையில் அடைத்தது.
சிறு கயம் கரையில் கண்ட அந்நுதலில்
கவின் கதைக்க கதை கவியக் கண்டேன்.
என்னமர் தளர்ந்து மதி முழுவதும் நீர
வார்த்தை ஏதும் இல்லாது நவில முயன்றேன்.
விசும்பித் திரியும் சிறு வெளிச்சமதெல்லாம்
புலம் மறந்து மயங்கிக்கிடந்தன அப்பொழிவின் முன்னே.
பெயல் பொழிய கார் பல கைகொடுக்க
மூங்கில் காட்டில் முகில் மேயும் பொழுதில்,
ரசித்தேன் ஒவ்வொரு அணுக்களையும்
குவியமில்லாத ஒரு காட்சிப் பேழையாக...!
- கிரிசேஷ் குமார்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக