செம்மை படைக்கும் வெப்பமதனில்,
கதகதக்க காட்டுக் குளிரும் சூழ,
நிலவொளி வெளிச்சமது எங்கும் வீசிட,
ஆற்றுநீரானைத்தும் மறுவுயிருடன் பாய,
கண்மூடும் கதிர்மறைப் பொழுதில்,
அலைந்தோடும் மனம்தான் எனது.
இமை மூடா எந்தன் கண் முன்,
எரியும் நெருப்பும் நடனமாடக் கண்டேன்.
கதை கூற முனைந்து நின்று,
எம்முகத்தை ஒளிரவைத்தது அவ்விருளில்,
கண்முன் தெரிந்ததை பார்த்த நானோ,
கண்ணுள் இருப்பதை அறிய முயன்றேன்.
நான் பார்த்த யாவும் ஓர் கதையாகயிருக்க,
காண மறந்த கதைகள் பல - கண்டேன்
கண் முன்தெரிந்த அந்நடனத்தில்.
இவையனைத்தையும் உணர்ந்த எனக்கு,
' எனக்காக' என்னும் சொல்லின் பொருளை,
கண்ணுள் காட்டியது சுடர்விடும் நெருப்பு!
- கிரிசேஷ் குமார்
கதகதக்க காட்டுக் குளிரும் சூழ,
நிலவொளி வெளிச்சமது எங்கும் வீசிட,
ஆற்றுநீரானைத்தும் மறுவுயிருடன் பாய,
கண்மூடும் கதிர்மறைப் பொழுதில்,
அலைந்தோடும் மனம்தான் எனது.
இமை மூடா எந்தன் கண் முன்,
எரியும் நெருப்பும் நடனமாடக் கண்டேன்.
கதை கூற முனைந்து நின்று,
எம்முகத்தை ஒளிரவைத்தது அவ்விருளில்,
கண்முன் தெரிந்ததை பார்த்த நானோ,
கண்ணுள் இருப்பதை அறிய முயன்றேன்.
நான் பார்த்த யாவும் ஓர் கதையாகயிருக்க,
காண மறந்த கதைகள் பல - கண்டேன்
கண் முன்தெரிந்த அந்நடனத்தில்.
இவையனைத்தையும் உணர்ந்த எனக்கு,
' எனக்காக' என்னும் சொல்லின் பொருளை,
கண்ணுள் காட்டியது சுடர்விடும் நெருப்பு!
- கிரிசேஷ் குமார்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக