தினமும் நோக்கும் கடிகாரம் கூட,
சிறிது நேரம் கண்மூடி விழிக்கும்.
கிழவி அவள் பேசும் கதைகள்கூட,
முற்று பெற்று முடிவை நாடும்.
நிம்மதியை தேடி ஓடும் நாம்மட்டும்,
அதனை நம்பியே நாட்களைக் கழிக்கிறோம்.
அலைந்துதிரிந்து நம்பிக்கையை கண்டெடுத்தோம்.
ஆனால், நிம்மதியை நாம் உணரமுடியவில்லை.
"ஏன் ?", என்று யோசித்துப் பார்க்கையில்,
அனுபவிக்கும் காலமது நகர்ந்து சென்றது.
மறுபிறவி எடுத்து வந்த நிம்மதியோ,
நாம் இன்று விரும்பும் பணமாக மாறியது!
- கிரிசேஷ் குமார்
சிறிது நேரம் கண்மூடி விழிக்கும்.
கிழவி அவள் பேசும் கதைகள்கூட,
முற்று பெற்று முடிவை நாடும்.
நிம்மதியை தேடி ஓடும் நாம்மட்டும்,
அதனை நம்பியே நாட்களைக் கழிக்கிறோம்.
அலைந்துதிரிந்து நம்பிக்கையை கண்டெடுத்தோம்.
ஆனால், நிம்மதியை நாம் உணரமுடியவில்லை.
"ஏன் ?", என்று யோசித்துப் பார்க்கையில்,
அனுபவிக்கும் காலமது நகர்ந்து சென்றது.
மறுபிறவி எடுத்து வந்த நிம்மதியோ,
நாம் இன்று விரும்பும் பணமாக மாறியது!
- கிரிசேஷ் குமார்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக