ஞாயிறு, 29 ஏப்ரல், 2018

ஊக்கம்

பனித்துளியை சுமக்கும் இலையில் 
இளவெயிலது பட்டுத் தெறிக்கும். 
இன்னிசையாக கூவும் குயிலின் குரலோ 
மற்றவர்களின் மனதை வருடும். 
மண் நனைந்து வீசும் அந்த வாசம் 
மழைவரும்முன் ஆடும் மயிலுக்கு தெரியும். 
சிறு வார்த்தைகள் பல பின்னிய கதைகள் 
சித்திரம் அமைத்து நகர்வதை கண்டேன், 
கண் முன் தோன்றி மறைவதெல்லாம் 
கனவென நினைத்து அலைந்துதிரிந்தேன். 
அலைந்து அலைந்து ஓய்ந்த கால்கள் 
அமைதி பெற்று நின்றது ஓரிடத்தில். 
நிலைபெற்ற அன்பதனைக் கண்டு 
நீடித்து நிற்க துடித்த உயிர் எனது.




                                                           - கிரிசேஷ் குமார்    

வெள்ளி, 13 ஏப்ரல், 2018

பிரியா(புரியா)விடை

கலையும் மேகங்கள் ஒன்றாக கூடிட, 
மறையும் கதிரவனும் மதியழகை கூட்டிட, 
கதை பல பேசிய காலங்களெல்லாம் 
ஒரு சிறுகதையாக கண்முன் ஓடிட, 
நம்பிக்கை எனும் சிறுஉறுதியினை 
தன்னம்பிக்கையாக மாறிட வித்திட்ட 
உயிர்கள் சில இவ்வுலகில் இருப்பின் 
அவர்கள் நமது கல்லூரி தந்த- தூய 
நட்பாகவே இருந்திட இயலும். 
எல்லா உணர்வுகளும் ஒன்றுசேர, 
தாம் கல்லூரியில் கழித்த முதல்நாளினை, 
கனவாக கண்டு திளைத்து, திகைத்தும் 
தூக்கமில்லாது கண்ட கனவது  கலைய,
தம் முகத்தை நனைக்கும் கண்ணீரை, 
துடைக்க மனமில்லாமல் மனமுடைந்து, 
சிரிப்பை விளைவித்த கல்லூரியின் கடைசிநாள்!


                                                                                                 - கிரிசேஷ் குமார்