செவ்வாய், 3 டிசம்பர், 2019

வியப்பு

கடத்தும் கார்முகிலில் கரையும் கதிரிளவன் 
மயங்கும் மனதுடன் தன்வியர்வையைச் சிந்த
மரக்கிளைகளை நனைக்கும் மழைத்துளிகள் 
மெதுவாய் கீழ்நோக்கி படர்ந்து வந்து
முகத்தில் பட்ட பல துளிகளுள் ஒன்றை 
தொட்டு மேல்நோக்கி  பார்த்தானவன் 
உதிரும் இலை ஒன்று அந்நொடியில்
அவ்வழி நடந்து சென்ற(அ)வனை அழைத்து 
மனமுழுதையும் ஈர்க்குமென்று அறியாமல்...

                                                                                     


                                                                              - கிரிசேஷ் குமார் 



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக