ஞாயிறு, 17 மே, 2020

நம்மக்கள்

காலத்திற்கு மாறா என்றிருந்த 
கனவுகள் எல்லாம் கண்முன்னே 
கரிசல்களாக மாறியதை காணகிடைக்க 
(துர்)பாக்கியம் செய்தேனோ முன்னொருநாள் 
பயணம் அதனில் துணைநின்று 
பண்பினை ஒழுகுவர் என்றிருக்க 
பணயம் வைத்தர் (நம்)பயணத்தை 
நம்பிக்கை என்ற வார்த்தைக்கு 
நிச்சயம் இல்லா இவ்வுலகில் 
பொருளறியாத (தன்)நலத்தால்  
நயம்பட நமது நிலையறிந்து 
நம்பிட செய்தர் நம்மக்களே...! 

நம்மக்கள் 



                                                    - கிரிசேஷ் குமார் 





கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக