ஞாயிறு, 11 ஆகஸ்ட், 2024

அனந்த கண்ணீர்

கருமேகங்கள் கூடும் பொழுதில் - மண் 

மணமது உயிர்த்தெழும் வகையில் 

சிறு விதையொன்று தாகம் தணிக்க 

சிந்தும் கண்ணீரும் ஆனந்தம் தானே...!

கண் முன் தெரியாத ஒளி

நிழலெல்லாம்  நிஜமாய் தெரியுமாம் - உன்

பார்வை  அதனில் இருளுறைந்து நிற்குமாம்

காலம் கடக்கும் காத்திருப்பில் - நிழலது

நிஜத்தில் மறையுமாம் உன் பின்னே!