கருமேகங்கள் கூடும் பொழுதில் - மண்
மணமது உயிர்த்தெழும் வகையில்
சிறு விதையொன்று தாகம் தணிக்க
சிந்தும் கண்ணீரும் ஆனந்தம் தானே...!
நிழலெல்லாம் நிஜமாய் தெரியுமாம் - உன்
பார்வை அதனில் இருளுறைந்து நிற்குமாம்
காலம் கடக்கும் காத்திருப்பில் - நிழலது
நிஜத்தில் மறையுமாம் உன் பின்னே!