மாற்றார் கூறும் சொற்களெல்லாம்,
மனம் தேடும் வார்த்தைகள் அல்ல.
பிறர்க்கு தோன்றும் எண்ணங்களெல்லாம்,
சொற்களாக வடிவம்பெற்று வருகின்றன.
சிலர் கூறும் கருத்துகளினால்,
அவ்வாரே உன் அடையாளம் அமைவதில்லை.
முகம் பல இருக்கும் இவ்வுலகில்,
மனம் சில பேசும் நொடிப்பொழுதில்.
இவையனைத்தையும் கட்டுப்படுத்தி,
கரைத்து செல்லும் நேரமது.
அதன் சுழலில் சுற்றி வந்த எண்ணமே,
திசை தேடி திரியும் பார்வைகளால்.
உன் அடையாளத்தை - உனக்கு
பிறர் கூறி தெரிவதை விட,
நீயே உன்னை தேடலாம் உன்னுள்ளே.
அது உண்மையா என்றும் ஆராயலாம்,
ஆனால், அவ்வாறு தேடும் பொழுதில்,
மாயமுகத்தில் தொலைந்துவிடக் கூடாது.
ஆகவே, "நீ யார் ?", என்ற முடிவை
உன்னைப் பார்ப்பவரோ அல்லது
உன்னுடன் நெருங்கி பழகியவரோ,
ஏன் உன் பெற்றோர்கூட கணித்திட முடியாது.
உன் மனதில் உன்னை பற்றி,
நீ நினைக்கும் எண்ணமே உருவெடுத்து,
உனக்கென்று ஒரு அடையாளத்தை உருவாகும்!
- கிரிசேஷ் குமார்