வியாழன், 26 அக்டோபர், 2017

யார் நீ ?

மாற்றார் கூறும் சொற்களெல்லாம், 
மனம் தேடும் வார்த்தைகள் அல்ல. 
பிறர்க்கு தோன்றும் எண்ணங்களெல்லாம், 
சொற்களாக வடிவம்பெற்று வருகின்றன. 
சிலர் கூறும் கருத்துகளினால், 
அவ்வாரே உன் அடையாளம் அமைவதில்லை. 
முகம் பல இருக்கும் இவ்வுலகில், 
மனம் சில பேசும் நொடிப்பொழுதில். 
இவையனைத்தையும் கட்டுப்படுத்தி, 
கரைத்து செல்லும் நேரமது. 
அதன் சுழலில் சுற்றி வந்த எண்ணமே, 
திசை தேடி திரியும் பார்வைகளால். 
உன் அடையாளத்தை - உனக்கு 
பிறர் கூறி தெரிவதை விட, 
நீயே உன்னை தேடலாம் உன்னுள்ளே.
அது உண்மையா என்றும் ஆராயலாம், 
ஆனால், அவ்வாறு தேடும் பொழுதில், 
மாயமுகத்தில் தொலைந்துவிடக் கூடாது. 
ஆகவே, "நீ யார் ?", என்ற முடிவை 
உன்னைப் பார்ப்பவரோ அல்லது 
உன்னுடன் நெருங்கி பழகியவரோ, 
ஏன் உன் பெற்றோர்கூட கணித்திட முடியாது. 
உன் மனதில் உன்னை பற்றி, 
நீ நினைக்கும் எண்ணமே உருவெடுத்து, 
உனக்கென்று ஒரு அடையாளத்தை உருவாகும்!




                                                                                              - கிரிசேஷ் குமார்    

செவ்வாய், 17 அக்டோபர், 2017

நின்று ரசித்த தருணம்

இமைத்து நின்றேன் ஒரு மாலைப்பொழுதில், 
மதி மயங்கி கிடந்த என்னையும் அவள் அன்று.
தம்மரையிதலைப் பார்க்கச் செய்தாள், 
சிறு சிறு எண்ணங்கள் எனக்குள்ளே - சேர்த்து 
சிற்பமாக செதுக்கச் செய்தாள் அவளங்கே. 
முடியா தருணமாக அது மாறிட வேண்டினேன், 
நான் நாடிடாத கடவுளிடம் கூட! 
அம்முகத்தைப் பார்த்து நின்ற என்னை, 
விழியிமையில் தூக்கி வீசினாள்,
வளைந்து செல்லும் சிறு கயலாக. 
வீழ்ந்தபின்னும் தயங்காது எழுந்தேன், 
அவள் முகத்தை கடையிலும் ரசிப்பதற்காக. 
சில காலங்கள் முன் இழந்த என் பலத்தை, 
மறுமலர்ச்சியடைய கண்டேன் அவள் முகத்தில்! 
இங்கு பலம் என்ற முடியா.... கூற்று, 
என் முழுநம்பிக்கையாம் என் தாயின் முகமே! 
விழித்தேன் பலநாள் மயக்கம் தெளிந்து, 
ரசித்தேன் அவளை என் கண்ணில் -உள்ள 
கருவிழி நோக்கும் பார்வையாக !!!





                                                                                              - கிரிசேஷ் குமார்   

வெள்ளி, 13 அக்டோபர், 2017

சன்னல் ஓரம்

யோசனைகள் பல இருந்தன ...
நடத்திக்கொண்டிருக்கும் பாடமும் புரியாமல், 
நடத்தும் ஆசிரியரையும் காணாமல்,  
வகுப்பறை ஓரமாய் ஒன்றியிருக்கும், 
சன்னலுடன் ஓர் உரையாடல். 
சற்றும் கலங்காது உற்றுநோக்கினேன். 
ஒன்பது கம்பிகளுடன் இருந்த ஒற்றைச்சன்னலை... 
சிறிது நேரத்தில் சட்டென்று ஒரு குரல், 
"நீ இருக்கும் இவ்வகுப்பில், 
பலரையும் நான் பார்த்ததுண்டு. 
ஒவ்வொரு மாணவனிற்கும் ஒரு கட்டத்தில், 
தத்தம் வாழ்வை மாற்றும் ஏணியாக, 
யான் அமைந்தேன்! அணைத்தேன் !
விருப்பமிருந்தால் என்னை நீயும் 
ஏதோ ஒரு விதத்தில் பயன்படுத்தி, 
உயரம் பல காணலாம் உன் வாழ்க்கையில்! ",
அது அந்த சன்னலின் மொழியென உணர்ந்தேன். 
பலரும் அதனைப் பார்த்திருப்பார்கள், 
நானும் அதனைப் பார்த்துக்கொண்டிருந்தேன். 
அதன் பின் தெரிந்த அழகினை உற்று. 
ஆம் அதன் அகத்தின் அழகு! 
என் மனம் மறுமொழிந்தது அதற்கு, 
" நான் யோசிக்க பல இருந்தும், 
உன்னை ஏன் நான் காணத்துடித்தேன்?
இக்கதையெழுத நீ கூறினாயோ அல்லது 
உன் அழகில் மயங்கிய என் 
எண்ணம் எழுத நினைத்ததோ !
மாற்றாரும் பார்க்கும் உன்னை - நான் 
மறுகோணத்தில் உணர்ந்தேன் உண்மையாக !",
புரிந்து கொண்டேன் ஓர் சிறு கோணத்தில் உன்னை. 
"ஒவ்வொரு வெற்றியிலும் நின்று ரசிக்கும், 
பல தோல்விகளில் உடனிருக்கும் உறுதியாக, 
உன் ஊக்கத்தை பார்த்து நான் வியந்தேன்! ".
சட்டென்று விழித்தேன் குறுந்தூக்கத்திலிருந்து, 
பாடத்தை முடித்துச் சென்ற ஆசிரியரையும் 
கவனிக்காது நான் - வைத்த கண் வாங்காமல் 
அந்த சன்னலைப் பார்த்துக்கொண்டிருந்தேன். 
அதன் வழியே பின்புறம் தெரிந்த மரக்கிளை ஒன்று, 
அசைந்து என்  எண்ணத்தைக் கலைக்கும் வரையில்!    







                                                                        - கிரிசேஷ் குமார்   

வியாழன், 5 அக்டோபர், 2017

மனம் செல்லும் திசை

தனிமை என்று நான் நினைத்த ஒன்று,
கற்றுக்கொடுத்தது அதன் மெய்ப்பொருளை.
பிறர் என்னை சூழ்ந்திருக்க - உணரவில்லை
அவர்களை என் மனதில் துளிகூட
"ஏன்?" என்று சிந்திக்க தொடங்கினேன்.
நாம் மாற்றாரை எவ்வாறு நினைத்துக்கொண்டாலும்,
அது நமக்குள்ளே தான் சுற்றித் திரியும்.
ஆனால் அவ்வெண்ணத்தை அவர்களுக்குள்,
புகுத்திப் பார்த்தால் விளைவுகள் என்றும்
ஓர் திசையையே நாடிடாது...
ஒருவனை நீ உன் உயிர் நண்பனாக கருதி,
அவனுக்கென நீ உன் நேரத்தை ஒதுக்கலாம்,
உன் மனதில் அவனுக்கென்று தனியிடத்தையும்,
கொடுத்து உன் மனதையும் பகிரலாம்.
ஆனால், அவன் உன்னை அவ்வாறே
நினைத்துக்கொண்டிருப்பான் என்று நம்பியிருக்கக்கூடாது.
உன் மனம் ஒருவனை நாடுவதுபோல்,
அவன் மனமும் அவ்வாறே செல்லும்.
அதில், அவன் நாடிய உள்ளம் நீ என்றால்,
நீ என்றும் மகிழ்வுடன் இருப்பாய்.
அதே, வேறு யாரோ என்று தெரிந்தால்,
உடைந்துவிடும் உன் உள்ளம் ஊசிநூலாக...
ஆதலால், சிலவற்றை அலசாது இருக்கலாம்,
இங்கு நம் பார்வை மங்குவதில் தவறில்லை. 
உன் உணர்வை புரிந்துகொண்ட ஒருவருக்காக, 
உன் உயிரையும் கொடுத்து உதவிடலாம்.
நம் மனதை பிறருக்காக நாடவிடாமல், 
நமக்காக முதலில் செயல்படச்செய்தால், 
நம் எண்ணம் என்றும் நம்முடனே இருக்கும் !







                                                                                                   - கிரிசேஷ் குமார்