வியாழன், 5 அக்டோபர், 2017

மனம் செல்லும் திசை

தனிமை என்று நான் நினைத்த ஒன்று,
கற்றுக்கொடுத்தது அதன் மெய்ப்பொருளை.
பிறர் என்னை சூழ்ந்திருக்க - உணரவில்லை
அவர்களை என் மனதில் துளிகூட
"ஏன்?" என்று சிந்திக்க தொடங்கினேன்.
நாம் மாற்றாரை எவ்வாறு நினைத்துக்கொண்டாலும்,
அது நமக்குள்ளே தான் சுற்றித் திரியும்.
ஆனால் அவ்வெண்ணத்தை அவர்களுக்குள்,
புகுத்திப் பார்த்தால் விளைவுகள் என்றும்
ஓர் திசையையே நாடிடாது...
ஒருவனை நீ உன் உயிர் நண்பனாக கருதி,
அவனுக்கென நீ உன் நேரத்தை ஒதுக்கலாம்,
உன் மனதில் அவனுக்கென்று தனியிடத்தையும்,
கொடுத்து உன் மனதையும் பகிரலாம்.
ஆனால், அவன் உன்னை அவ்வாறே
நினைத்துக்கொண்டிருப்பான் என்று நம்பியிருக்கக்கூடாது.
உன் மனம் ஒருவனை நாடுவதுபோல்,
அவன் மனமும் அவ்வாறே செல்லும்.
அதில், அவன் நாடிய உள்ளம் நீ என்றால்,
நீ என்றும் மகிழ்வுடன் இருப்பாய்.
அதே, வேறு யாரோ என்று தெரிந்தால்,
உடைந்துவிடும் உன் உள்ளம் ஊசிநூலாக...
ஆதலால், சிலவற்றை அலசாது இருக்கலாம்,
இங்கு நம் பார்வை மங்குவதில் தவறில்லை. 
உன் உணர்வை புரிந்துகொண்ட ஒருவருக்காக, 
உன் உயிரையும் கொடுத்து உதவிடலாம்.
நம் மனதை பிறருக்காக நாடவிடாமல், 
நமக்காக முதலில் செயல்படச்செய்தால், 
நம் எண்ணம் என்றும் நம்முடனே இருக்கும் !







                                                                                                   - கிரிசேஷ் குமார்   

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக