இமைத்து நின்றேன் ஒரு மாலைப்பொழுதில்,
மதி மயங்கி கிடந்த என்னையும் அவள் அன்று.
தம்மரையிதலைப் பார்க்கச் செய்தாள்,
சிறு சிறு எண்ணங்கள் எனக்குள்ளே - சேர்த்து
சிற்பமாக செதுக்கச் செய்தாள் அவளங்கே.
முடியா தருணமாக அது மாறிட வேண்டினேன்,
நான் நாடிடாத கடவுளிடம் கூட!
அம்முகத்தைப் பார்த்து நின்ற என்னை,
விழியிமையில் தூக்கி வீசினாள்,
வளைந்து செல்லும் சிறு கயலாக.
வீழ்ந்தபின்னும் தயங்காது எழுந்தேன்,
அவள் முகத்தை கடையிலும் ரசிப்பதற்காக.
சில காலங்கள் முன் இழந்த என் பலத்தை,
மறுமலர்ச்சியடைய கண்டேன் அவள் முகத்தில்!
இங்கு பலம் என்ற முடியா.... கூற்று,
என் முழுநம்பிக்கையாம் என் தாயின் முகமே!
விழித்தேன் பலநாள் மயக்கம் தெளிந்து,
ரசித்தேன் அவளை என் கண்ணில் -உள்ள
கருவிழி நோக்கும் பார்வையாக !!!
- கிரிசேஷ் குமார்
மதி மயங்கி கிடந்த என்னையும் அவள் அன்று.
தம்மரையிதலைப் பார்க்கச் செய்தாள்,
சிறு சிறு எண்ணங்கள் எனக்குள்ளே - சேர்த்து
சிற்பமாக செதுக்கச் செய்தாள் அவளங்கே.
முடியா தருணமாக அது மாறிட வேண்டினேன்,
நான் நாடிடாத கடவுளிடம் கூட!
அம்முகத்தைப் பார்த்து நின்ற என்னை,
விழியிமையில் தூக்கி வீசினாள்,
வளைந்து செல்லும் சிறு கயலாக.
வீழ்ந்தபின்னும் தயங்காது எழுந்தேன்,
அவள் முகத்தை கடையிலும் ரசிப்பதற்காக.
சில காலங்கள் முன் இழந்த என் பலத்தை,
மறுமலர்ச்சியடைய கண்டேன் அவள் முகத்தில்!
இங்கு பலம் என்ற முடியா.... கூற்று,
என் முழுநம்பிக்கையாம் என் தாயின் முகமே!
விழித்தேன் பலநாள் மயக்கம் தெளிந்து,
ரசித்தேன் அவளை என் கண்ணில் -உள்ள
கருவிழி நோக்கும் பார்வையாக !!!
- கிரிசேஷ் குமார்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக