புதன், 14 பிப்ரவரி, 2018

காகிதக்கப்பல்

கரை சேரா மீனவனவன்,
கடல் நீரின் உப்பாக மிதக்க,
மனமுடைந்த அவன் மனைவியோ,
உப்பிட்ட கணவனுக்காக,
உப்பினை மட்டுமே உணவாக உன்ன,
இவையனைத்தையும் நினைத்த நொடியிலே,
கரைந்தேன் என் கண் (கடல்) நீரில் உப்பாக....!!!




இப்படிக்கு அவன் கரைசேர துடித்து கண்ணீரில் கரையும் நான்.

பிணைப்பு

சொற்கள் பல கைகோர்த்த
கதை அதனில் உனைத்தேடி
உன் கருவிழியில் எனைப்பார்த்து
அன்பை நாடி நான் அலைய
அனைத்தும் அன்பாய் நீ தெரிந்தாய்
நீரொட்டா எண்ணையில் படர்ந்த
தீப திரியாக நான் இருந்தேன்
என்னை நிமிர்த்தி ஒளியேற்றினாய் நீ  
அச்சமதனில் மிதந்த என்னை - மீட்டெடுத்து 
கரைசேர்த்தாய் பாசப் படகில்.




                                                                                       - கிரிசேஷ் குமார் 

வியாழன், 8 பிப்ரவரி, 2018

மழை அவள் இனிமை !

சிற்றன்பின் செவியில் - ஒரு 
சிறுதுளி மழை வரையில், 
சிந்தனை கலைந்த மனமோ, 
பாலின் வண்ணம் தெரிய, 
பழச்சுவை அதனை அறிய, 
என் சிறு நாவின் - பல 
நரம்புகள் நடனமாடின. 
முகத்தில் விழுந்த மழையோ, 
சிரிப்பை தரித்த துளியோ, 
மரத்தில் மலர்ந்த மலரும், 
மனதில் தெரிந்த முகமும், 
வெண்முகில்கள் நடுவில் - கண்ட 
அந்நிலவின் ஒளியில் கண்டேன். 
நினைவில் மறந்த எனையும், 
நிழலில் மறைந்த மதியோ, 
கனவில் கரைந்த - எந்தன் 
கன்னத்தில் முத்தமிட்டாள்!



                                                                                                   - கிரிசேஷ் குமார்