சிற்றன்பின் செவியில் - ஒரு
சிறுதுளி மழை வரையில்,
சிந்தனை கலைந்த மனமோ,
பாலின் வண்ணம் தெரிய,
பழச்சுவை அதனை அறிய,
என் சிறு நாவின் - பல
நரம்புகள் நடனமாடின.
முகத்தில் விழுந்த மழையோ,
சிரிப்பை தரித்த துளியோ,
மரத்தில் மலர்ந்த மலரும்,
மனதில் தெரிந்த முகமும்,
வெண்முகில்கள் நடுவில் - கண்ட
அந்நிலவின் ஒளியில் கண்டேன்.
நினைவில் மறந்த எனையும்,
நிழலில் மறைந்த மதியோ,
கனவில் கரைந்த - எந்தன்
கன்னத்தில் முத்தமிட்டாள்!
- கிரிசேஷ் குமார்
சிறுதுளி மழை வரையில்,
சிந்தனை கலைந்த மனமோ,
பாலின் வண்ணம் தெரிய,
பழச்சுவை அதனை அறிய,
என் சிறு நாவின் - பல
நரம்புகள் நடனமாடின.
முகத்தில் விழுந்த மழையோ,
சிரிப்பை தரித்த துளியோ,
மரத்தில் மலர்ந்த மலரும்,
மனதில் தெரிந்த முகமும்,
வெண்முகில்கள் நடுவில் - கண்ட
அந்நிலவின் ஒளியில் கண்டேன்.
நினைவில் மறந்த எனையும்,
நிழலில் மறைந்த மதியோ,
கனவில் கரைந்த - எந்தன்
கன்னத்தில் முத்தமிட்டாள்!
- கிரிசேஷ் குமார்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக