வியாழன், 8 பிப்ரவரி, 2018

மழை அவள் இனிமை !

சிற்றன்பின் செவியில் - ஒரு 
சிறுதுளி மழை வரையில், 
சிந்தனை கலைந்த மனமோ, 
பாலின் வண்ணம் தெரிய, 
பழச்சுவை அதனை அறிய, 
என் சிறு நாவின் - பல 
நரம்புகள் நடனமாடின. 
முகத்தில் விழுந்த மழையோ, 
சிரிப்பை தரித்த துளியோ, 
மரத்தில் மலர்ந்த மலரும், 
மனதில் தெரிந்த முகமும், 
வெண்முகில்கள் நடுவில் - கண்ட 
அந்நிலவின் ஒளியில் கண்டேன். 
நினைவில் மறந்த எனையும், 
நிழலில் மறைந்த மதியோ, 
கனவில் கரைந்த - எந்தன் 
கன்னத்தில் முத்தமிட்டாள்!



                                                                                                   - கிரிசேஷ் குமார் 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக