புதன், 14 பிப்ரவரி, 2018

பிணைப்பு

சொற்கள் பல கைகோர்த்த
கதை அதனில் உனைத்தேடி
உன் கருவிழியில் எனைப்பார்த்து
அன்பை நாடி நான் அலைய
அனைத்தும் அன்பாய் நீ தெரிந்தாய்
நீரொட்டா எண்ணையில் படர்ந்த
தீப திரியாக நான் இருந்தேன்
என்னை நிமிர்த்தி ஒளியேற்றினாய் நீ  
அச்சமதனில் மிதந்த என்னை - மீட்டெடுத்து 
கரைசேர்த்தாய் பாசப் படகில்.




                                                                                       - கிரிசேஷ் குமார் 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக