செவ்வாய், 3 டிசம்பர், 2019

வியப்பு

கடத்தும் கார்முகிலில் கரையும் கதிரிளவன் 
மயங்கும் மனதுடன் தன்வியர்வையைச் சிந்த
மரக்கிளைகளை நனைக்கும் மழைத்துளிகள் 
மெதுவாய் கீழ்நோக்கி படர்ந்து வந்து
முகத்தில் பட்ட பல துளிகளுள் ஒன்றை 
தொட்டு மேல்நோக்கி  பார்த்தானவன் 
உதிரும் இலை ஒன்று அந்நொடியில்
அவ்வழி நடந்து சென்ற(அ)வனை அழைத்து 
மனமுழுதையும் ஈர்க்குமென்று அறியாமல்...

                                                                                     


                                                                              - கிரிசேஷ் குமார் 



சனி, 31 ஆகஸ்ட், 2019

ஒரு படி மேல்

ஒருமையில் இருந்தவன் நான் - என்னையும் 
உன்னை நோக்கி நகரச் செய்து 
நித்தம் நின் நிழலில் நான் வாழ நினைக்க 
தசையனைத்தும் உருகிட உன் பார்வையில் 
என் தவறுகள் பலவற்றை சரி செய்து நீ 
தவறாதவாறு நான் உன்னை பார்த்துக்கொள்ள 
ஏக்கம் அனைத்தையும் வடிந்த என் கண்ணீரில் 
துடைத்தெறிந்த உன் மடியில் நான் சாய 
எனை நானே எதிர்பார்க்காதவாறு மாற்றிய 
உன்னை நீ எதிர்பார்த்ததை விட 
நான் இன்று ஒரு படி மேல் சென்று 
முற்று பெறாத எனது ஒரே கவிதையாய் 
பார்க்கத் தொடங்கிவிட்டேன்...


புதன், 15 மே, 2019

காத்திருப்பு !

மனம் நிறைந்து மழையது பொழிய 
மதி மயங்கி மனமது உணர 
பார்வை சிதறாக கண்ணதனைக்காண 
பனைஓலையில் படர்த்துளியாய் நானும் 
நினைவலையில் நித்தம் நீந்தி 
நிகழ்வனைத்தும் நிஜமாய் எண்ணி 
வார்த்தைகளாய் வடிவம் பெற்று
வருகையை எண்ணி காத்திருந்தேன்...!




                                                           - கிரிசேஷ் குமார் 


திங்கள், 29 ஏப்ரல், 2019

தவிப்பு

யாரென்று தெரியாது யவரென்று புரியாது 
குழம்பித்தவிக்கும் மனமதன் வழியில் 
கெட்டவை நல்லதாகவும் அதே சமயம் 
நல்லவை கெட்டாதவவும் பார்த்திடும் இக்கண்கள் 
அதற்க்கு பார்வையிடும் அந்த உயிருக்கும் 
மனமொன்று இருப்பதனை மறந்துவிடுகின்றன 
இதையறிந்த தவிப்பில் கிடைக்கும் அம்மனமோ 
அனுபவிக்கும் இன்னல்கள் ஏரளமெனினும் 
இவற்றை மறைத்து சிரிக்கும் முகமானது 
மனதின் வழியை வெளிப்படுத்துவதில்லை!







                                                                                                     - கிரிசேஷ் குமார்   

புதன், 9 ஜனவரி, 2019

நீரின்றி அமையாது உலகு!

விண்ணிலிருந்து மண்ணடைய காத்திருக்கும்
சிறு துளிகள் பலவற்றின் சுமைதாங்கும் மேகங்காள்
ஒன்றுக்கொன்று இணையத்தொடங்கும் அத்தருணத்தில்
துல்லிய மழை துளியொன்று தூய அம்முகிலில் இருந்து
தரை பட்டு தஞ்சம் புகுந்திட புறப்பட்டு மேலிருந்து 
கடல் நீரின் உப்பில் கரைய - கீழ் நோக்கி 
காற்றில் கலந்து கரை சேர காத்திருக்கும் நேரத்தில் 
வாடிடும் பயிரை கண்டு நிற்கும் விவசாயியின் 
கண்களும் கலங்கும்  அக்காட்சியைப் பார்த்து.




                                                                       - கிரிசேஷ் குமார்