செவ்வாய், 15 ஆகஸ்ட், 2017

கதை கொண்ட படமது ...

வண்ணங்கள் பல கலந்திருக்கும், 
வர்ணனைகள் சில மறைந்திருக்கும், 
இவை பேசிய சிறுகதைகள், 
கண்டவுடன் ஈர்க்கும் படமல்ல அது. 
கற்பனையுடன் காட்சி தந்து, 
கனவில் கலையாது நிமிர்ந்து நின்று, 
என்னிடம் ஏதோ வினவிய படமது! 
வண்ணங்கள் பூசும் அழகுடன் இருந்தும், 
வணிக நோக்கம் எதுவும் இல்லாமல், 
கசந்த உண்மையை காட்டிய முகத்தில், 
கரை படித்தவர் எவரோ எவரோ...?
கடற்கரை மணலில் செதுக்கிய- கலைமதியான  
சிற்பங்கள் அதனை கேட்கவில்லை. 
அங்கிருந்த கண்ணகி சிலைக்கும், 
காந்தி சிலைக்கும் அது தெரியவில்லை. 
கேட்டது என்னிடத்தில் அந்த சோகம்நிறைந்த,
கசக்கி எறியப்பட்ட அந்த காகித புகைப்படம். 
பதில் சொல்ல முடியாது திகைத்தேன், 
அதன் அழகை உணர்ந்து உற்று நோக்கியபடி! 




                                                                                   - கிரிசேஷ் குமார்   

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக