செவ்வாய், 8 ஆகஸ்ட், 2017

சிறகுகள்

சிறகுகள் வேண்டும் எனக்கு, 
சட்டென்று பறந்துவிடுவேன், 
சோகத்தையும் மறந்துவிடுவேன்.
பொறாமைக்கொண்டேன் அப்பறவையைக்கண்டு, 
பறந்து செல்லும் பலநேரம், 
குறையாத உற்சாகத்துடன் நித்தம். 
தானாகப் பறக்கும் அதனைப்போல், 
தனியாக நகர முயல்கிறேன் நான். 
தடையற்று நீட்டும் அச்சிறகினில், 
தன்னம்பிக்கை தெரிகிறது அவ்வழியிலே. 
என்னை மதியா சுற்றத்தில், 
நிற்கவேண்டிய கட்டாயத்தில் தவித்திருந்தேன், 
என் செய்வதென்றறியாமல் நான். 
என்னை நான் தொலைத்தேன் அன்று, 
என் மனதை நான் மறந்தபொழுது. 
தெரியவில்லை  அன்றெனக்கு, 
அதற்கும் உயிர் உள்ளதென்று. 
அறியாத சிறுவனாய் நான், 
மயங்கினேன் என் முன் தெரிந்த 
அனைத்தினிற்க்கும் பயந்து சென்று. 
பறந்து வந்த பறவை அது, 
கற்றுத்தந்தது என் தேவையினை. 
இவற்றை நான் பள்ளியிலும் பயிலவில்லை, 
கல்லூரியிலும் கிடைக்கவில்லை. 
ஏன், என்னை சூழ்ந்ததே இருக்கும், 
எனது நண்பர்களும் கூறிடவில்லை. 
அன்று தான் உணர்ந்தேன் நான்... 
தனிமையின் இனிமையினை! 
அன்றெனக்கு சிறகுகள் முளைத்திருந்தால், 
பயந்திருக்க மாட்டேன் -நான் 
என்னை மறந்திருக்க மாட்டேன். 
அப்பறவைக்குத் தெரிய வாய்ப்பில்லை, 
என் மனமறிந்த துன்பத்தினை.. 
மடிந்து மறுபிறப்பில் நான் பிறந்தால், 
அப்பறவைப்போல் நானும் இருக்க விளைகிறேன், 
சிறகுகளுடன் நினைத்ததும் பறந்து செல்ல...!




                                                                                                  - கிரிசேஷ் குமார்  



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக