புதன், 30 ஆகஸ்ட், 2017

எதிரொலி

எதிர் கண்ட எண்ணமெல்லாம், 
எதிரொலியாய் வந்ததெனக்கு, 
வாய் பேசா வார்த்தைகள் கூட, 
வடக்கிலிருந்து வந்தொலிக்க, 
வீணடிக்கும் சொல் பல இருந்தும், 
வருந்த வைத்தது இச்சொல் என்னுள். 
நான் பேசும் வார்த்தைகள் யாவும், 
ஒரு முறையோடு மடிந்துவீழ்ந்தன. 
அகல் பேசிய வார்த்தைகள் யாவும், 
பகல் முழுதும் பிணையக் கேட்டேன். 
எனது எதிரொலியை சமாளித்தாலும், 
எதிர்கொள்ளும் ஒலிகள் பல, 
சட்டென்று சாய்ந்தன என் மனதை. 
சிறுக சிறுக நான் பேசிய போதும், 
பெறுகிக் கேட்டது எந்தன் செவியில். 
ஆனாலும் என் மனம் முடியவில்லை... 
"ஒரு முகம் மடிந்த போதும், 
  மறுமுகத்தில் உன்னை பார் ", என்று 
பல ஒலியினில் ஓர் ஒலி கூறியது, 
அறிவொளியாக என்னை பார்த்து!




                                                                                          - கிரிசேஷ் குமார்   

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக