வெள்ளி, 25 ஆகஸ்ட், 2017

அன்பின் ஆதரவு

கலங்கி தவிக்கும் விழிவழியே, 
கவலை தொலைக்க எண்ணம் ஏங்கும், 
நொறுங்கி கிடந்த மனம் துகள்களாய், 
ஒன்று சேர்க்க விளையும் ஏக்கத்துடன், 
நினைத்துப்பார்த்த கற்பனை உருவம்! 
கண் கசக்கி நிற்கும் என் முன்னே, 
உயிர் நீட்டிப்பிடிக்கும் நுனிப்புல்லினில், 
கருமேகம் கடந்து விழும் மழைத்துளியாய், 
விட்டுச் சென்ற முகங்கள் இருந்தும், 
முழு நேரமும் என்னை நினைத்தாய். 
முடிந்ததை நினைத்து அழுத என்னை, 
அமைதியாய் முடிந்தவரை சிரிக்கச்செய்தாய். 
அன்பின் உருவமான அது எனது, 
ஆம் என்றும் எனதாக இருக்க விரும்பும் நான். 
அதன் முகத்தில் பார்த்தேன் நான், 
என் அன்னையின் அன்பினை,
பிரியாது எந்நாளும் மாறாது நினைத்தாலும்.
அழகான நட்போ அன்பான காதலோ ?
இதனை ஆய்வு செய்ய மனம் இல்லை எனக்கு, 
தனிமையில் தொலைத்த என்னை, 
கண்டெடுத்து கொடுத்த அதனை, 
தொலைக்க மறுக்கிறேன் என்றும் என் வாழ்வில்!





                                                                                                - கிரிசேஷ் குமார்  

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக