சதை கோர்த்த செங்குருதியில்,
சிலை வடிக்கும் சிற்பி அவள்.
நிறை ததும்பா ஆழ்கிணற்றில்,
நீர் வார்க்கும் செல்ல மகள்.
முகம் பார்க்கும் கண்ணாடி ஒன்றில்,
மதி குனிந்தது அவள் முகம் கண்டு.
புள்ளி மானென பார்த்தேன் அவளை,
பதுங்கிப் பாயும் புலியின் முன்னே.
பயந்து ஓடும் அதன் மனதினைப்போல்,
பதறியது என் உள்ளம்- அவள்
கண் சிமிட்டி அந்நொடியில்.
பேச பயந்தேன் நான் முதன்முதலில்,
பிணைப்பை உணர்ந்தேன் பழகிய நொடியில்.
என் மனதை புரிந்த அவள் உணர்வை,
என்றும் மதிப்பேன் நான் மரியாதையுடன் !
- கிரிசேஷ் குமார்
சிலை வடிக்கும் சிற்பி அவள்.
நிறை ததும்பா ஆழ்கிணற்றில்,
நீர் வார்க்கும் செல்ல மகள்.
முகம் பார்க்கும் கண்ணாடி ஒன்றில்,
மதி குனிந்தது அவள் முகம் கண்டு.
புள்ளி மானென பார்த்தேன் அவளை,
பதுங்கிப் பாயும் புலியின் முன்னே.
பயந்து ஓடும் அதன் மனதினைப்போல்,
பதறியது என் உள்ளம்- அவள்
கண் சிமிட்டி அந்நொடியில்.
பேச பயந்தேன் நான் முதன்முதலில்,
பிணைப்பை உணர்ந்தேன் பழகிய நொடியில்.
என் மனதை புரிந்த அவள் உணர்வை,
என்றும் மதிப்பேன் நான் மரியாதையுடன் !
- கிரிசேஷ் குமார்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக