முனை அறிய ஒரு முனையில்,
பட்டையாக தீட்ட உதவி செய்து,
எண்ணங்களை எழுத்தாக மாற்றி,
கலந்த பல உணர்வோடு ஊட்டி,
என்னை நான் இவ்வுலகிற்கு காட்ட,
என்னுள் தோன்றிய சில கருத்துக்களை,
கதைக்களமாக்கி புரியவைக்கும்,
புரியாத புதிர் என்று நான் என்னும்,
என் கையின் ஓர் அங்கமாக,
மெதுவாக நகர்த்தும் நின் விரலை,
நிற்காது பாயும் துன்பங்கள் பல,
துடைத்தெடுக்கும் கருவியாக நீ,
என்னுள் ஒன்றாய் , ஓவியமாய்...
மறைந்திருந்து எனக்கோர் பெயராக,
நீல நிற குருதியுடன் என்,
மன வலிமைகளையும் பல மெருகேற்றி,
என் கையை நீ பிடித்து,
வளைந்துக் கொடுத்தாய் நீ எனக்கு,
வல்லமை வகுத்தது உன் எழுத்து,
தண்ணீரை தாங்கும் வெண்முகிலைப்போல,
சிலரில் ஒருவனாய் என்னையும் மதித்து,
வல்லினமாக என்னிடம் நீ வந்தடைந்தாய்.
என் எழுத்துக்கு உயிர் கொடுத்து,
எனக்காக உழைக்கும் எனது,
பேனா முனை நோக்கி நான் வியந்தேன் !
- கிரிசேஷ் குமார்
பட்டையாக தீட்ட உதவி செய்து,
எண்ணங்களை எழுத்தாக மாற்றி,
கலந்த பல உணர்வோடு ஊட்டி,
என்னை நான் இவ்வுலகிற்கு காட்ட,
என்னுள் தோன்றிய சில கருத்துக்களை,
கதைக்களமாக்கி புரியவைக்கும்,
புரியாத புதிர் என்று நான் என்னும்,
என் கையின் ஓர் அங்கமாக,
மெதுவாக நகர்த்தும் நின் விரலை,
நிற்காது பாயும் துன்பங்கள் பல,
துடைத்தெடுக்கும் கருவியாக நீ,
என்னுள் ஒன்றாய் , ஓவியமாய்...
மறைந்திருந்து எனக்கோர் பெயராக,
நீல நிற குருதியுடன் என்,
மன வலிமைகளையும் பல மெருகேற்றி,
என் கையை நீ பிடித்து,
வளைந்துக் கொடுத்தாய் நீ எனக்கு,
வல்லமை வகுத்தது உன் எழுத்து,
தண்ணீரை தாங்கும் வெண்முகிலைப்போல,
சிலரில் ஒருவனாய் என்னையும் மதித்து,
வல்லினமாக என்னிடம் நீ வந்தடைந்தாய்.
என் எழுத்துக்கு உயிர் கொடுத்து,
எனக்காக உழைக்கும் எனது,
பேனா முனை நோக்கி நான் வியந்தேன் !
- கிரிசேஷ் குமார்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக