சாலை ஓரத்தில் நின்ற ஒருவர்,
சதை தெரியுமளவில் உடை கிழிந்து,
சிகைத் தோற்றத்தில் கைகளை ஏந்தி,
நடபதறியாது மயங்கி நின்றும்,
கண்ணோரத்தில் உள்ள கண்ணீர் கூட,
கசிந்த இடம் தெரியாது காய்ந்திருக்க,
முகத்தில் உள்ள ஏக்கம் குறையாது,
மனதில் உள்ள வருத்தம் முடியாது,
குரல் உயர்த்த முடியாத நிலையில்,
"அம்மா ! அய்யா !", என்று அவர்
கூச்சலிட்ட அந்நொடியிலேயே நொறுங்கினேன்!
தூய அன்பினால் மட்டுமே முடியுமோ ???
ஒரு காலத்தில் வந்தோருக்கெல்லாம்
வயிறு நிறைய அன்னமிட்ட கையது.
இன்று ஒரு பொழுது உணவுக்கு
துடிக்கும் தன் வயிற்றிற்காக,
மனம் வராமல் இருந்தும்,
பிறரிடம் கையேந்தும் நிலையில் அவர்...
தூக்கி வளர்த்த பிள்ளைகளெல்லாம்,
பொத்தி பொத்தி வளர்த்த தந்தையின்,
இருப்பை ஏற்க முடியாமல்,
அவர் கூறிய கருத்துக்களைக்கூட,
கேட்க நேரமில்லாத அவர்கள்,
வளர்த்த பாசத்தையும் மறந்து,
வீதியில் இடமளித்தனர் விறுவிறுப்பாக...
அவர் சொத்தையும் எடுத்துக்கொண்டு,
அன்பையும் பறித்துக்கொண்டு - தகப்பனிடம்
சோகத்தை மட்டும் விட்டுச் சென்றனர் .
சொத்தாக ... அவர் சேர்த்த சொத்தாக...
தம் குழந்தைகளை உயிராக வளர்த்தவர்
வீதியில் நின்றிருக்க - அவர் நினைவு கூட
இல்லாமல் இருக்கும் அவர் பெற்றெடுத்த
பிள்ளைகள் தமக்கென வாழமுற்பட்டனர்.
இவர்களில் யார் பிச்சைக்காரர் ???
தூக்கி வளர்த்த தந்தையா ????
இல்லை தூக்கி எறிந்த பிள்ளைகளா ???
இதனை யோசித்த என் கண்களில்,
அவர் சிந்த நினைத்த கண்ணீர் மட்டுமே கசிந்தது!
- கிரிசேஷ் குமார்
சதை தெரியுமளவில் உடை கிழிந்து,
சிகைத் தோற்றத்தில் கைகளை ஏந்தி,
நடபதறியாது மயங்கி நின்றும்,
கண்ணோரத்தில் உள்ள கண்ணீர் கூட,
கசிந்த இடம் தெரியாது காய்ந்திருக்க,
முகத்தில் உள்ள ஏக்கம் குறையாது,
மனதில் உள்ள வருத்தம் முடியாது,
குரல் உயர்த்த முடியாத நிலையில்,
"அம்மா ! அய்யா !", என்று அவர்
கூச்சலிட்ட அந்நொடியிலேயே நொறுங்கினேன்!
தூய அன்பினால் மட்டுமே முடியுமோ ???
ஒரு காலத்தில் வந்தோருக்கெல்லாம்
வயிறு நிறைய அன்னமிட்ட கையது.
இன்று ஒரு பொழுது உணவுக்கு
துடிக்கும் தன் வயிற்றிற்காக,
மனம் வராமல் இருந்தும்,
பிறரிடம் கையேந்தும் நிலையில் அவர்...
தூக்கி வளர்த்த பிள்ளைகளெல்லாம்,
பொத்தி பொத்தி வளர்த்த தந்தையின்,
இருப்பை ஏற்க முடியாமல்,
அவர் கூறிய கருத்துக்களைக்கூட,
கேட்க நேரமில்லாத அவர்கள்,
வளர்த்த பாசத்தையும் மறந்து,
வீதியில் இடமளித்தனர் விறுவிறுப்பாக...
அவர் சொத்தையும் எடுத்துக்கொண்டு,
அன்பையும் பறித்துக்கொண்டு - தகப்பனிடம்
சோகத்தை மட்டும் விட்டுச் சென்றனர் .
சொத்தாக ... அவர் சேர்த்த சொத்தாக...
தம் குழந்தைகளை உயிராக வளர்த்தவர்
வீதியில் நின்றிருக்க - அவர் நினைவு கூட
இல்லாமல் இருக்கும் அவர் பெற்றெடுத்த
பிள்ளைகள் தமக்கென வாழமுற்பட்டனர்.
இவர்களில் யார் பிச்சைக்காரர் ???
தூக்கி வளர்த்த தந்தையா ????
இல்லை தூக்கி எறிந்த பிள்ளைகளா ???
இதனை யோசித்த என் கண்களில்,
அவர் சிந்த நினைத்த கண்ணீர் மட்டுமே கசிந்தது!
- கிரிசேஷ் குமார்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக