கனவாக கலைந்ததே பெண்ணே !
கவலைகளெல்லாம் கனவாக கலைந்ததே பெண்ணே !
உன் விழி சிமிட்டும் தருணத்திலெல்லாம்,
வியர் மூச்சும் நிற்பதைக் கண்டேன்.
நீ பார்வையில் பேசிய வார்த்தைகளெல்லாம்,
வளையிட்டு பிடித்தது என்னை அக்கணமே,
எனது உயிரின் முழு மூச்சாக நீ தெரிந்தாய்...
என்ன வீசினாய் என் விழி முன்னே ?
மறைந்து கிடந்த என் மனதை,
தேடித் கொடுத்தாய் நீ அன்றே.
தொலைத்த இடத்தில் பார்த்திருந்தால்,
உன் முகத்தை அங்கே மறந்திருப்பேனோ ?
சுமை தாங்கி பார்க்கும் உன்னை,
சளைக்காமல் ஒவ்வொரு நாளும்,
சிதறாத இமை எனது இமைக்காமல்,
கவலைகள் பலவிருப்பதை மறைத்து.
வினை எல்லாம் வேகமாக என்னை,
விட்டுச் சென்றது விரும்பியபடி.
நரகத்திலும் நான் இருப்பேன்,
உன்னுடனே நகர்ந்து சென்றால்.
கனவாக கலைந்ததே பெண்ணே !
கடல் முழுதும் தெரிந்ததே முன்னே !
- கிரிசேஷ் குமார்
கவலைகளெல்லாம் கனவாக கலைந்ததே பெண்ணே !
உன் விழி சிமிட்டும் தருணத்திலெல்லாம்,
வியர் மூச்சும் நிற்பதைக் கண்டேன்.
நீ பார்வையில் பேசிய வார்த்தைகளெல்லாம்,
வளையிட்டு பிடித்தது என்னை அக்கணமே,
எனது உயிரின் முழு மூச்சாக நீ தெரிந்தாய்...
என்ன வீசினாய் என் விழி முன்னே ?
மறைந்து கிடந்த என் மனதை,
தேடித் கொடுத்தாய் நீ அன்றே.
தொலைத்த இடத்தில் பார்த்திருந்தால்,
உன் முகத்தை அங்கே மறந்திருப்பேனோ ?
சுமை தாங்கி பார்க்கும் உன்னை,
சளைக்காமல் ஒவ்வொரு நாளும்,
சிதறாத இமை எனது இமைக்காமல்,
கவலைகள் பலவிருப்பதை மறைத்து.
வினை எல்லாம் வேகமாக என்னை,
விட்டுச் சென்றது விரும்பியபடி.
நரகத்திலும் நான் இருப்பேன்,
உன்னுடனே நகர்ந்து சென்றால்.
கனவாக கலைந்ததே பெண்ணே !
கடல் முழுதும் தெரிந்ததே முன்னே !
- கிரிசேஷ் குமார்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக