ஏக்கமே ஏங்கும் அளவிற்கு,
எதிர்திசையில் எறிந்த கல்லாய்,
எனை மீறி மனதில் படிந்த எண்ணம் ஒன்று.
எதிர்பார்ப்புகள் ஏராளம்- ஆனால்
அதனை எட்டி பிடிப்பது தான் கடினம்.
ஒரு சிறுவனின் எதிர்பார்ப்பு "மீசை முளைக்காதா?",
என்று இல்லாத மீசையை முறுக்குவது.
மீசை முறுக்கும் அவன் தகப்பனின் எதிர்பார்ப்பு
தன் தாய் மடியில் கவலை மறந்து
மணிநேரமாவது நிம்மதியாக தூங்கிட.
வயதிற்கு வந்த பெண்ணின் எதிர்பார்ப்பு
பார்க்கும் கண்களெல்லாம் அவளை நோக்கிட.
அதே வயது இளைஞனின் எதிர்பார்ப்பு
அந்த 'அவள்' அவனை பார்க்கமாட்டாளா என்று.
நம்மில் சிலர் ஏங்குவது - தனிமையின்
சுகத்தினை நாமும் பெறவேண்டுமென்று.
இவ்வுலகில் பலர் ஏங்குவது - இருள்
நீக்கும் ஒளியாக ஒருவராவது தமக்காக
தம் வாழ்வில் நுழைவாரோ என்று.
ஒரு தோழனின் எதிர்பார்ப்பு - தன் நட்பு
கடையளவிலும் தன்னுடனே நீங்காதிருக்க.
ஒரு மகளின் ஏக்கம் தன் தந்தையின் நிம்மதியாகும்.
ஒரு மகனின் ஏக்கம் தன் தாயின் அரவணைப்பாகும்.
இவ்வாறு ஏக்கம் , எதிர்பார்ப்பு என பல உள்ளன.
அவை அவ்வாறே நடந்தால் நல்லது.
ஆனால், அவையனைத்தும் நடக்கும் என்று
நம்பி எதிர்பார்ப்பது மடமையாகுமோ?
விடை தேட விருப்பமுமில்லை, நேரமும் இல்லை.
நம் எதிர்பார்ப்பு நம்முடன் இருக்கும் வரை
ஏக்கம் என்ற ஒன்று தொடர்ந்துகொண்டே இருக்கும்.
ஆனால், அது வெளி சென்று நடக்கவில்லையெனில்,
நினைத்த நிகழ்வெல்லாம் நிழலாக மறையும்!
- கிரிசேஷ் குமார்
எதிர்திசையில் எறிந்த கல்லாய்,
எனை மீறி மனதில் படிந்த எண்ணம் ஒன்று.
எதிர்பார்ப்புகள் ஏராளம்- ஆனால்
அதனை எட்டி பிடிப்பது தான் கடினம்.
ஒரு சிறுவனின் எதிர்பார்ப்பு "மீசை முளைக்காதா?",
என்று இல்லாத மீசையை முறுக்குவது.
மீசை முறுக்கும் அவன் தகப்பனின் எதிர்பார்ப்பு
தன் தாய் மடியில் கவலை மறந்து
மணிநேரமாவது நிம்மதியாக தூங்கிட.
வயதிற்கு வந்த பெண்ணின் எதிர்பார்ப்பு
பார்க்கும் கண்களெல்லாம் அவளை நோக்கிட.
அதே வயது இளைஞனின் எதிர்பார்ப்பு
அந்த 'அவள்' அவனை பார்க்கமாட்டாளா என்று.
நம்மில் சிலர் ஏங்குவது - தனிமையின்
சுகத்தினை நாமும் பெறவேண்டுமென்று.
இவ்வுலகில் பலர் ஏங்குவது - இருள்
நீக்கும் ஒளியாக ஒருவராவது தமக்காக
தம் வாழ்வில் நுழைவாரோ என்று.
ஒரு தோழனின் எதிர்பார்ப்பு - தன் நட்பு
கடையளவிலும் தன்னுடனே நீங்காதிருக்க.
ஒரு மகளின் ஏக்கம் தன் தந்தையின் நிம்மதியாகும்.
ஒரு மகனின் ஏக்கம் தன் தாயின் அரவணைப்பாகும்.
இவ்வாறு ஏக்கம் , எதிர்பார்ப்பு என பல உள்ளன.
அவை அவ்வாறே நடந்தால் நல்லது.
ஆனால், அவையனைத்தும் நடக்கும் என்று
நம்பி எதிர்பார்ப்பது மடமையாகுமோ?
விடை தேட விருப்பமுமில்லை, நேரமும் இல்லை.
நம் எதிர்பார்ப்பு நம்முடன் இருக்கும் வரை
ஏக்கம் என்ற ஒன்று தொடர்ந்துகொண்டே இருக்கும்.
ஆனால், அது வெளி சென்று நடக்கவில்லையெனில்,
நினைத்த நிகழ்வெல்லாம் நிழலாக மறையும்!
- கிரிசேஷ் குமார்