ஞாயிறு, 10 டிசம்பர், 2017

கதிர் "அவன் " காதல்

மதி மீது கதிரவன் கொண்ட காதல் 
காவிய கதையினும் பழமையாகும். 
அக்கதைகள் பல மாய்ந்தாலும் 
கதிர் "அவன் " காதல் மட்டும் மாய்வதில்லை. 
ஒருவன் தன்னை தாழ்த்திக்கொண்டு 
தன் காதலை நேசிப்பதுப்போல் 
காலை முழுதும் பறந்து விரிந்த தம் 
கதிர்களை - மலர்ந்த மாலையில் 
சுருக்கிக்கொண்டு அவ்விருளில் 
நிலவவளின் ஒளியழகினை பார்த்து 
மயங்கத் துடித்தான்...
தன்னைப்பற்றி சிறிதும் யோசிக்காமல் 
காதல்கண்ணோடு அவனவளை 
நேசிக்கத்தொடங்கியபோது இவ்வுலகானது 
அந்த காதல் காவியத்தை பார்க்கப் பிறந்தது.





                                                                                            - கிரிசேஷ் குமார்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக