வியாழன், 21 டிசம்பர், 2017

சிரிப்பு

மந்திர தந்திரம் தெரியாமல் இருப்பினும், 
தந்திர மந்திரம் ஒன்றை நன்கறிவோம். 
வாழ்வென்பது புரியாமல் இருந்தாலும், 
இருப்பது எதற்கென்று தெரியாமல் திரிந்தாலும், 
சரித்திரம் படிக்க வழியில்லை என்றாலும், 
சரித்திரம் அமைக்க வழி ஒன்று கண்டாலும், 
சிரிப்பென்பதே விடையாக அமையும். 
பிறரை நமக்கு பிடித்திருந்தாலும்,
நம்மை பிறர்க்கு பிடித்திருந்தாலும், 
சிலர்மேல் நமக்கு கோபமிருந்தாலும், 
நம் இன்பத்தை மற்றவருடன் பகிரவும், 
நம் துன்பத்தை அவர்களிடமிருந்து மறைக்கவும்,
நமது முகத்தையே அவர்களுக்கு காட்டும் முகமூடியாக 
நாம் உபயோகிக்கும் அந்த தந்திர மந்திரமே சிரிப்பு!



                                                                                                     - கிரிசேஷ் குமார் 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக