இடம்பெயர தவித்த மனதை,
தடம் அமைத்து கூட்டிச்செல்லும்.
தவிப்பென்பதை மறைக்கச் செய்து,
இதயம் துடித்த கணத்திலெல்லாம்,
கல்லென நின்ற மனத்துள்ளும்,
ஈரம் பாய நித்தம் நினைத்து,
நம்பிக்கையெனும் பாலம் அமைக்க,
முயற்சித்தது எந்தன் உள்ளம்.
கல்லை கரைக்க வழியில்லதெனினும்,
அதனை நனைக்க வழி தெரிந்தது.
ஒற்றுமை என்ற வார்த்தை ஒன்று,
ஒருங்கிணைக்கும் பாலமே நம்பிக்கையாகும்.
சிதறி திரிந்த மனமும் முற்றும்
பாலம் அதன்மேல் நித்தம் சுற்றும்.
- கிரிசேஷ் குமார்
தடம் அமைத்து கூட்டிச்செல்லும்.
தவிப்பென்பதை மறைக்கச் செய்து,
இதயம் துடித்த கணத்திலெல்லாம்,
கல்லென நின்ற மனத்துள்ளும்,
ஈரம் பாய நித்தம் நினைத்து,
நம்பிக்கையெனும் பாலம் அமைக்க,
முயற்சித்தது எந்தன் உள்ளம்.
கல்லை கரைக்க வழியில்லதெனினும்,
அதனை நனைக்க வழி தெரிந்தது.
ஒற்றுமை என்ற வார்த்தை ஒன்று,
ஒருங்கிணைக்கும் பாலமே நம்பிக்கையாகும்.
சிதறி திரிந்த மனமும் முற்றும்
பாலம் அதன்மேல் நித்தம் சுற்றும்.
- கிரிசேஷ் குமார்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக