செவ்வாய், 5 டிசம்பர், 2017

அன்பு

கதிரொளியில் பட்டுதிக்கும் தாமரை போல, 
மனக்கலக்கத்தால் சேர்ந்த கண்ணீரை, 
துடைத்தெடுக்கும் தூய அன்பாகும் அது.
கவலைகள் பல அது களையெடுக்க, 
கரையில்லாமல் நம்மிடமது கரையொதுங்க. 
மௌனம் மொழியும் வார்த்தைகளெல்லாம், 
கண்ணடித்து உணர்த்திடும் அது நமக்கு. 
அன்பால் மலரும் சிரிப்புகள் பல இருந்தும், 
அதனால் உருவெடுக்கும் கோபமும், 
அதற்கு காரணமாகும் பிரிவுகளும், 
தத்தம் வலிமைகளையெல்லாம் ஒருங்கிணைக்கும். 
சிறு சிறு சண்டைகளும் விழுதுகளே, 
வீரியமுடன் நிற்கும் அம்மரத்தின் 
விதையாக மலரும் பேரன்பினால்.
'மன்னிப்பு' என்ற ஒரு சிறு வார்த்தை, 
மக்களின் பிரிதலும் புரிதலும் 
அவர்களின் வாழ்வின் இருதுருவங்களாம்
என்பதை நமக்கு நன்குணர்த்தும். 
நம்பிக்கையுடன் கூடிய எந்த பாசமும், 
அன்பென்னும் தாயின் அடிமைகளாகும்!




                                                                                               - கிரிசேஷ் குமார்   

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக