வியாழன், 30 நவம்பர், 2017

இனிமை

கருமுகிலும் நெஞ்சை வருடி, 
கதிர் மறைய ஆடை சூழ்ந்து, 
நிலமுழுதும் நிதானம் நிறைந்து, 
மனமெல்லாம் மகிழ்ச்சி பரவி, 
பரபரப்பான பொழுதை மாற்றி, 
சட்டென்று  கண்விழிக்க - ஆனந்த 
கண்ணீரும் என்மேல் பட்டுத்தெறிக்க,
காதலெனும் திரைகடலால் சூழ, 
அதிலிருந்து தப்பிக்க சிறிதும் நினைக்காமல்,
நான் அதில் முழுமையாக மூழ்க,
இனிமையான அந்த மழையில், 
என் மனதை நனைக்கக் காத்திருந்தேன் 
காதல் பேச பார்த்திருந்தேன்...!



                                                                                 - கிரிசேஷ் குமார் 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக