ஞாயிறு, 19 நவம்பர், 2017

தோழி

திரிந்த திசை தெரியாமல் இருந்த என்னை, 
திரை திறந்து விழிக்கச் செய்தவள் அவள். 
செய்வதறியாது திகைத்தபோது, 
இன்செய்தால் நன்மை தருமென மொழிந்தாள். 
மலர்மேல் படர்ந்த வெண்பனிபோல, 
உணர்வெடுத்து ஊட்டினாள் என் தோழி. 
சிறுவண்டுகூட தேன் தேடி சுற்றியபோது, 
எனக்கென மட்டும் எனை சுற்றி நீ வந்தாய். 
கண்மூடி நம்புவேன் உன்னை என்றும்,  
உன் முடிவு என் முடிவாக அமைந்தாலும்கூட. 
கோபம் கொள்வேன் உன்னிடம் நான், 
உரிமையுடன் எனக்காக என்றும் நீ இருப்பாயென்று. 
சிலிர்த்து போன எந்தன் இதயமோ, 
துள்ளித் துடித்தது என்வாழ்வில் நீ நுழைந்தபோது. 
என்னை புரிந்து கொண்ட நீ எனக்கு, 
மறு அன்னையாக என் மனதில் பதிந்தவளாவாய்!



                                                                                                         - கிரிசேஷ் குமார்  

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக