புதன், 15 நவம்பர், 2017

ஒரு மதில் கூறிய கதை...

என்மேல் அமர்ந்தான் ஒருவன் அன்று, 
தனிமையில் இருந்த சிற்றோனைக்கண்டு, 
கண்ணீர்த்துளிகள் உலகை ரசிக்க, 
கவலைமழையில் அவன்  ரசனை மறக்க, 
தன்னுடன் கதைக்க உள்ளம் ஏங்க, 
ஏமாற்றம் தந்த மௌனம் எனது. 
நிலவொளியின் வெளிச்சம் கூட, 
வீசவில்லை அவன் மனதின் நடுவில். 
என்மேல் படர்ந்த முள் செடியும்கூட, 
செவி சாய்ந்தன அவன் கண்ணீர்பட்டு. 
பேசமுடியா அசைந்த அவன் இதழும், 
இதயம் கதைக்க என் கண்முன் கண்டேன். 
அதை பார்த்த எந்தன் மனமோ, 
அவன் கண்ணீரைத்துடைத்து ஆறுதலளிக்க,
உயிர்பெற வேண்டி துடித்தது என்னுள்ளே!



                                                                                         - கிரிசேஷ் குமார் 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக