திங்கள், 27 நவம்பர், 2017

விழிப்பு

உணர்வென்று நினைக்கும் பொழுதில்
கனவாக கலையும் சுற்றத்தின் நடுவில்
தனித்து நின்ற ஒரு மரக்கிளையின் ஏக்கம்... 
தன்னை கண்டுகொள்ளாத உறவுகளை எண்ணி, 
தன்னுடன் இருக்கும் உயிரையெல்லாம் மறந்ததன்று. 
தம் விழிக்குத் தெரியாமல் தமக்கு
உதவிய அவ்வனைவரையும் அது
சிறு துரும்பாகவும் மதிக்காமல் இருந்தது. 
ஆனால்,  கவலையில் வாடிய அது
தன் வாழ்வின் ஒவ்வொருநாளையும்
வாழ்ந்ததாக தம்மையே ஏமாற்றிக்கொண்டு, 
வாழாதே கழித்தது மடமையுடன். 
திடிரென்று ஒருநாள் அது மடிந்தது
அதன்பிறகு மேலிருந்து பார்த்தபொழுது, 
தனது கண்முன்னே தெரிந்ததெல்லாம்
அதனிடம் வாழ்ந்த பறவைகளும், 
அதன் உணவாக இருந்துவந்த பூச்சிகளும் அதை விட்டுச் செல்ல மனமில்லாமல் சென்ற
அந்த காட்சி மட்டுமே....
இதனைக்கண்ட பிறகு துடித்தது அதன் உள்ளம்.!
இத்தனை நாட்கள் வீணடித்ததை எண்ணி...
வருத்தம் கொண்டு பயனில்லை என்பதனை
அறியாமல் அங்கும் உயிர்நீங்க ஏங்கியது மரக்கிளை...!
வாழும்போது நம் பார்வைக்கு தெரிவதைமட்டும்
பார்த்து மயங்கி ஏமார்ந்திடாது
நமக்காக வாழவும் சிலர் இருப்பார்கள் என்ற
சிந்தனையை மனதில் வைத்து நாட்களை கழித்தால்
அதுவே நாம் வாழ்ந்த வாழ்க்கைக்கு அர்த்தமாகும்!!!



                                             - கிரிசேஷ் குமார்   

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக