சனி, 4 நவம்பர், 2017

மனிதம்!

இவ்வுலகில் வாழும் ஒவ்வொருவரும், 
ஒரு விதத்தில் நமக்கு சொந்தமாவார்கள். 
"அப்படி இல்லை", என்று சிலர் 
நம்முடன் முரண்படுவதும் கூடும். 
அதனால், உண்மை என்றும் மறையாது. 
காதல் என்ற ஒன்று -இன்று 
தனித்திரு ஆண் பெண்ணுக்குரியதையிற்று. 
இன்று காதல் என்ற கூற்றை கேட்டவுடன், 
சிலர் போற்றுவதும் உண்டு, 
சிலர் தூற்றுவதும் உண்டு. 
அது நாம் மாற்றிய சமூக நிலைப்பாடாகும். 
ஆனால், காதல் என்பது 
நிறங்களைக்கடந்து, மாந்தரை மறந்து 
மதம், இனம், மொழி என பல 
வேறுபாடுகளையும் களைந்து, 
அவற்றையெல்லாம் ஒருங்கிணைத்து, 
காலத்திற்கும் அழியாத பாலமாகும்! 
யார் என்று தெரியாமல், 
நிறம் பார்க்க நினைக்காமல், 
மாற்றார்க்கு உதவும் மனம் இருந்தும், 
அங்கு சென்று நாம் ஆராயவேண்டியது 
மதத்தை அல்ல மனிதத்தை! 
இவ்வுலகில் பல துன்பங்கள் நடக்கின்றன... 
அவையெல்லாம் நமக்கு தென்படுவதில்லை, 
நமக்கு எப்போது அத்துன்பம் வருகிறதோ 
அப்போது தான் அதனை உணருகிறோம். 
அந்நிலையில், நாம் வேறுபாட்டையெல்லாம் 
தவிர்த்து உதவி என்று நிற்கிறோம், 
அவ்வாறு நிற்போர்க்கு உதவவும் நினைக்கிறோம். 
இவ்வெண்ணம் நாம் வாழும் இப்புவியில், 
ஒவ்வொரு நொடியிலும் நம்முடன் இருந்தால் 
மனிதநேயம் என்பது என்றும் மறையாது. 
அத்தகைய மனிதமே உண்மையான காதல் !



                       
                                                                                                     - கிரிசேஷ் குமார் 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக