புதன், 15 நவம்பர், 2017

உயிரில் உணர்ந்த உறவு

என் முகம் மலர தினமும் துடிக்கும், 
தீர்வறியாது திரிந்த என்னை, 
தெளிவாக்கிய உள்ளம் அது தான். 
சிரிப்பென்பது மறந்த போது, 
மடமையாற்று சிரிக்க செய்து, 
சிறந்ததை தேடிய எனக்கு, 
சீரான வழியையும் காட்டி, 
கைகோர்த்து நடந்து வந்து, 
கடமை என்று நினைத்துவிடாது,
என்னையும் கருத்தில் கொண்டு,  
முழு அன்புடன்  நேசித்த மனமது. 
கண்ணீர் கடலில் தவித்த என்னை, 
காகிதக் கப்பலில் ஏற்றிக்கொண்டு, 
கரை சேர கூட்டிச் சென்றது, 
என் உயிரில் கலந்த என் நட்பு !




                                                                                   - கிரிசேஷ் குமார்  


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக