பக்கங்கள் பல இருப்பினும்,
பார்வையை ஈர்க்கும் இதழ் ஒன்றாகவே இருக்கும்.
அதில் சில வரிகள் சிரிக்கச் செய்யும்,
இன்னும் சில வரிகள் சிந்திக்கவும் செய்யும்.
இது போன்ற பக்கங்கள் சில இருக்கலாம்
நாம் படிக்கும் அந்த புத்தகத்தில்.
ஒரு சிலவை சோகத்தில் ஆழ்த்தும்,
சில பக்கங்கள் நம்மை வழிநடத்த உதவும்.
காதல் கொள்ளும் பக்கங்கள் சில,
கோபம் தனிக்கும் பக்கங்கள் பிற.
பக்கங்கள் எத்தனை இருப்பினும்,
இடம்பெறும் வார்த்தைகள் என்பது
புத்தகத்தின் உயிரை வளர்க்கும்.
படிக்கும் வாசகர் யவராக இருப்பினும்,
படித்து முடித்தவுடன் எண்ணுவது...
முற்றுப்பெறாத புள்ளிகளாக திகழும்
தத்தம் வாழ்க்கை பதிவுகளே...!
- கிரிசேஷ் குமார்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக