ஞாயிறு, 12 நவம்பர், 2017

உணர்வுகள்...

நம் உணர்வுகள் வேறுபட்டாலும், 
மனம் அவற்றை ஒருங்கிணைக்கும். 
மகிழ்ச்சியுடன் சிரிப்பவர்களைவிட,
பலர் இவ்வுலகில் தினந்தோறும்,  
துன்பத்திலும் புன்னகைத்து, 
பிறரை சிரிக்கவைக்கவும், 
தம்மவர்களுக்காக போலி எனும் 
முகத்திற்குப் பின்னே அழுதும்,
வருந்தியும் வாடிக்கொண்டிருப்பர்.  
இது 'தவறு' என்று கூறவே முடியாது. 
'மாற்றாரிடம் பகிர்வதில்லை' என்றும் 
அவர்களை எளிதில் குறைகூறவும் முடியாது. 
பிறர் துன்பத்தில் சிரிப்பவர்களை விட, 
பிறர் தம் துன்பத்தால் வருந்தாமல் இருக்க, 
நாள்தோறும் சிரித்து மறைப்பவர்கள், 
பல மடங்கு சிறந்தவராவார். 
ஒருவன் ஒரு விஷயத்தை உன்னிடம் 
கூறாது மறுக்கிறான்  என்று  
சிந்திப்பது நியாயம் தான் - அதற்காக 
அவன் மேல் கோபம் கொள்வதையெல்லாம்  
நான் தவறாக பார்க்கவில்லை. 
ஆனால், இவற்றையெல்லாம் செய்யும்முன் 
ஒரு நிமிடமாவது ஒதுக்கி, 
"அவன் ஏன் என்னிடம் கூறவில்லை ?",
என்று சிறிது யோசித்தாலோ அல்லது, 
அவன் மனநிலையில் சற்று நீங்கள் 
இருந்து சிந்தித்தாலோ உங்களுக்கே 
அந்த விடை கிடைத்துவிடும். 
அதன் பிறகு அவன் செய்தது தவறாயின், 
உங்கள் கோபம் நியாயமானது. 
அதிலும் கோபம் என்பது வெளிப்படையாக 
ஒருவருடன் காரணத்துடன் இருக்கவேண்டும், 
முதலில் அது அவற்றுக்கு தெரிந்திருக்கவேண்டும். 
ஆம், இப்புவியில் எல்லாவற்றிற்கும், 
ஒவ்வொரு வழிமுறை இருக்கின்றது. 
அதன் வழி செயல்படுவதே சிறந்தது. 
வெட்கம் என்பதும் இயல்பானதாகும். 
ஏன் சில வெட்கத்தில் அழகும், 
அதன் உடைமையும் வெளிப்படும். 
இது ஒருவர் மீதுள்ள பற்றுதல் காரணமாக,  
எல்லோருக்கும் வருவது இயல்பு. 
இதனால் அவரிடம் பயமும், 
பிணைந்துகொண்டே இருக்கும். 
அவை தவறில்லை -ஆனால் 
அந்த பயத்தை வளரவிடுவது தவறாகும். 
இவ்வாறு நான் கூறிய சிலவற்றைப்போல், 
இன்னும் பல பல உணர்வுகளை, 
நம் மனம் ஒருங்கிணைத்து சேர்த்துவைக்கும். 
"உணர்வுகள் பல விதம், 
ஒவ்வொன்றும் ஒரு விதம்",
இக்கூற்று எல்லோருக்கும் சரியாக பொருந்தும்.








                                                                                                         - கிரிசேஷ் குமார்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக