புதன், 7 மார்ச், 2018

அடைய துடிக்கும் உயிர்...

உயிர்த்தெழ நினைத்தேன் நான்! 
நடுநாகரீகனாக இருந்த ஒருவனுள், 
ஒற்றை படல வார்த்தைகளை, 
தன் வாழ்வடியில் வாக்கியமாக்கி... 
செதுக்க பல வழிகள் இருந்தும்,
செங்கதிர் உதிக்கும் திசையில், 
சிலை முகமது பளிச்சிடுமாறு, 
தன் சிரத்தை அவனும் தாழ்த்தி, 
தாழ்ந்திடாத வாழ்க்கை நெறிகள்பல, 
தளர்ந்திடாமல் நம்முன் எறிந்திட, 
உருவாக்கிய அந்நாடுநாகரீகனாய், 
உயிர்த்தெழ நினைத்தேன் நான்!




                                                                                             - கிரிசேஷ் குமார்   

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக