வியாழன், 1 மார்ச், 2018

மனம் உரைக்கும் அறிவுரை ...

நம் பேச்சில் புரியும் வார்த்தைகளெல்லாம், 
நம்மை பின்தொடர்ந்து வருவது இல்லை. 
கவலையில் தேங்கும் எண்ணங்களெல்லாம், 
கரைய காத்திருக்கும் காலப்போக்கில். 
அறிய துடிக்கும் மௌனங்கள் அதனில் 
மறைந்திருந்து மலரும் மொழிகள்.
தடைபட்ட நம் உறவுகளெதையும்,  
தனிமை தடுத்து நிறுத்துவதில்லை. 
அலைந்து திரிந்து உழைப்பதினாலே 
ஊதியம் உடலுக்கு கிடைப்பதுமில்லை. 
சற்று நேரம் இளைப்பதினாலே, 
சாதனை அது தவறுவதில்லை. 





                                                                                         - கிரிசேஷ் குமார் 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக