செவ்வாய், 20 டிசம்பர், 2016

நீ யார் எனக்கு ?




புது புது உறவுகள் இவ்வுலகில்,
அதில் ஒன்றாக நினைக்கவில்லை நான் உன்னை ...
நான் இங்கு இருப்பதற்கு நீ தேவை என்று உணர்ந்தேன்!
முதன் முதலில் நீ யாரோ நான் யாரோ,
என்று நினைத்தேன்...
     நாம் எதற்காக சந்தித்தோம் என்றறியாமல்! 
சில நாட்களில் நீ என்னுள் ஒருவனாக,
எனக்காக ஒருவனாய்,
என் உயிரைப் பகிர்ந்து கொண்டாய்.
பல நாட்கள் தேவை இல்லை நமக்கு,
நாம் யார் என்று உலகறிய.
உனக்கும் எனக்கும் மட்டும் தான் 
தெரியும் "தோழா" என்று நீயும் நானும் சேர்ந்து இருப்போம் இறுதிவரையில்!!! 





                                                                                  - கிரிசேஷ் குமார் 



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக